Tuesday 3 September 2019

வாடிய பணம்

கீறல் விழுந்த கண்ணாடியும்
தையல் போட்ட செருப்பும்
பச்சை துண்டுடன்...

எட்டு மணி பஸ்ச பிடிக்க
 கீரை கட்டுடன் வந்து நின்றான்
அந்த மாநிற மனிதன்...

நாளாய் மடித்த பத்து ரூபாய் நோட்டை
 இறுக்கி பிடித்தபடி  நிற்க
இடம் இல்லாத பஸ்சில் ..

வேண்டா வெறுப்பாய் அவனை
கடந்து சென்றது அந்த பயணம்
இடம் வருவதற்குள் பாதி பணம் வாடி போச்சு..

வேற வழியும் இல்ல
ஈர துணியில் பாதி கீரைக்கும்
மீதி அவன் வயித்துக்கும்ன்னு ஆயிருச்சு. . 

3 comments: