Tuesday 17 September 2019

முகநூல் வாசி

இவன் கால்வாசி ஜனத்தொகையின் சாபக்கேடு.
தொலைபேசியின் காதலனாய்
முகநூல் பக்கத்தில் முகமில்லா
மனிதனாய் வாழத்தொடங்கிவிட்டான்..

தன்னை சுற்றிய அனைத்து
விருப்பங்களையும் கோபங்களையும்
வெறும் எழுத்துக்களாகவும் கார்ட்டூன் பொம்மைகளாகவும்
கடந்து செல்கிறான்...

இணையத்தின் வேகத்தில்
நடைபாதை பூக்களையும், ஜன்னல் ஓர பயணங்களையும்
டீக்கடை நண்பர்களையும்
சிட்டுக்குருவியாய் தொலைத்தான்...

முகநூல் பக்கத்தில்
உலகையே பார்த்தாலும் தன்னையும்
தன் கைக்குள்ளயே சிறை வைத்துக்கொள்கிறான்
இந்த முகநூல் வாசி.... 

1 comment: