விதைத்த நாள் முதல்
வாங்கிய கடனுக்கு வட்டியை
கூட்டிய
படி…
நிறை மாத ஆண் மகனாய்
வயலுக்கு வந்தான் மாணிக்கம்
இன்று காலை மண் வெட்டியும்
தலைப்பாகையுமாய் வயலுக்கு வந்தவனை
செம்மண் விரிசல்களாய் சிறு தழையும்
தண்டுமாய் விதைத்த அத்தனையும்
விளைந்து நின்றன…
ஆனந்த கண்ணீரும்,
கன்னக்குழி நிறைந்த
அந்த சிரிப்பும்
அவனை
ஆயிரம் பிள்ளைக்கு
அப்பனாக்கியது…
செம துளசி இவ்வளவு பிஸிளையும் உங்களுக்கு எழுத வர்றது கிரேட் தான்
ReplyDeleteSuper mapla....
ReplyDelete