Monday 9 September 2019

நிறை மாத ஆண் மகன்


விதைத்த நாள் முதல்
வாங்கிய கடனுக்கு வட்டியை
கூட்டிய படி

நிறை மாத ஆண் மகனாய்
வயலுக்கு வந்தான் மாணிக்கம்

இன்று காலை மண் வெட்டியும்
தலைப்பாகையுமாய் வயலுக்கு வந்தவனை

செம்மண் விரிசல்களாய் சிறு தழையும்
தண்டுமாய் விதைத்த அத்தனையும்
விளைந்து நின்றன…

ஆனந்த கண்ணீரும், கன்னக்குழி நிறைந்த
அந்த சிரிப்பும் அவனை
ஆயிரம் பிள்ளைக்கு அப்பனாக்கியது…           

2 comments:

  1. செம துளசி இவ்வளவு பிஸிளையும் உங்களுக்கு எழுத வர்றது கிரேட் தான்

    ReplyDelete