Thursday 21 March 2024

வரக்காப்பி

தலைமேட்டில் வச்ச வரகாப்பியின் 

கருப்பட்டி மனத்துடன்...


கயத்து கட்டிலில் எல்லாம் இழந்தவனாய் 

சிந்தனையில் இருந்தான் முருகன் ...


காப்பி ஆறப்போகுது எடுத்து  குடி என 

அதட்டியவளாய் உள்ளே வந்தால் வள்ளி.. 


இளைய மகளின் கிழிந்த சீருடை!

மூத்தவனின் பழைய புத்தகப்பை!

இன்னும் சரி செய்யப்படாத கூரையென!


இன்றும் அவன் விடியல் 

விடியாமல் போனது...


Friday 12 March 2021

எனை தாங்கும் ஓடமே

 கரைதாண்டி ஒரு நகரமாம்,

கடலோடு ஒரு பயணமாய்...


விண்ணோடு முகில் ஓவியம்,

கண்ணெட்டும் கடல் கம்பளம்..


நினைவுகள் எல்லாம் அலைகளாய்,

கனவுகள் எல்லாம் கரைகளாய்...


உன்மீதொரு கடல் பறவையாய் ஆனேனே, 

எனை தாங்கும் ஓடமே...

Thursday 28 November 2019

கல் சாமி சிரிக்குதடி

வேப்பமர காடும் செம்மண் தரையும்
கல்பாறை குளமும் மொட்டை கோபுரமாய்
கோவிலை  கண்டான்...

வந்துசேர வழியும் இல்ல
மழைக்கு ஒதுங்க, கூரையும் இல்ல
புயல் மழையில கோவிலும் கரையல ...

யோசனையில் பணம் சேர்த்து
தங்கத்தில் சிலை வார்த்து
மூணு அடுக்கு நிலை வச்சான் மாணிக்கம்...

இப்போ, நிற்க இடம் இல்ல, காருக்கும் பஞ்சமில்லை
கூச்சலுக்கும் குறையில்லை
வேதனையில் நின்றவனைபார்த்து,
பழைய கல் சாமி சிரிக்குதடி...

Friday 27 September 2019

அரை குறை

வேல்கம்பும் தீப்பந்தமுமாய்
காடு மலை திரிந்தவன்
கடைசியில் நதிக்கரை வந்தடைந்தான்...

இடம் கண்டவன், தேவைக்காக
கல், மரம், மண், ஏர் தொழில்
செய்து வாழத்தொடங்கி...

ஓர் தொழில் செய்தவன் கூட்டமானான்
அவன் தொழில் அந்த கூட்டத்திற்கு
அடையாளமாகி போனது ...

அவன் தொழில் அறிவும், ஆற்றலும்
வணிகமும் சார்ந்து செல்லாமல்
அரை குறை அறிவாய் சாதியாய் நின்றது..

Tuesday 17 September 2019

முகநூல் வாசி

இவன் கால்வாசி ஜனத்தொகையின் சாபக்கேடு.
தொலைபேசியின் காதலனாய்
முகநூல் பக்கத்தில் முகமில்லா
மனிதனாய் வாழத்தொடங்கிவிட்டான்..

தன்னை சுற்றிய அனைத்து
விருப்பங்களையும் கோபங்களையும்
வெறும் எழுத்துக்களாகவும் கார்ட்டூன் பொம்மைகளாகவும்
கடந்து செல்கிறான்...

இணையத்தின் வேகத்தில்
நடைபாதை பூக்களையும், ஜன்னல் ஓர பயணங்களையும்
டீக்கடை நண்பர்களையும்
சிட்டுக்குருவியாய் தொலைத்தான்...

முகநூல் பக்கத்தில்
உலகையே பார்த்தாலும் தன்னையும்
தன் கைக்குள்ளயே சிறை வைத்துக்கொள்கிறான்
இந்த முகநூல் வாசி.... 

Thursday 12 September 2019

மாநகர அகதி

குக்கிராமத்தின் கடைசி பேருந்தில்
ஜன்னல் சீட்டை பிடித்தபடி  வருங்கால
கனவுகளுடன் சென்னை புறப்பட்டான்...

சினிமாவில் அவன்  பார்த்த சென்னை
நிஜத்தில் நெரிசலும், கோபமும்,
பயமும், பதட்டமுமாய் மட்டுமே இருந்தது..

ஐந்து ரூபா டீயும் , அளவு சாப்பாடும்
சங்கிலியால் பிணைக்கப்பட்ட
மாநகர டம்ளாரும் அவனை
பிழைக்க வந்தவன் என 
அகதியாக்கியது...

இறக்குமதி செய்யப்பட்ட காருக்கும்
கடைக்கும் செல்போனுக்கும்
இடையில்  அவன் மட்டும்

எண்ணெய் வைத்து சீவிய தலையுடன்
உள்நாட்டு உற்பத்தியாய்
தனித்து நின்றான்... 

Monday 9 September 2019

நிறை மாத ஆண் மகன்


விதைத்த நாள் முதல்
வாங்கிய கடனுக்கு வட்டியை
கூட்டிய படி

நிறை மாத ஆண் மகனாய்
வயலுக்கு வந்தான் மாணிக்கம்

இன்று காலை மண் வெட்டியும்
தலைப்பாகையுமாய் வயலுக்கு வந்தவனை

செம்மண் விரிசல்களாய் சிறு தழையும்
தண்டுமாய் விதைத்த அத்தனையும்
விளைந்து நின்றன…

ஆனந்த கண்ணீரும், கன்னக்குழி நிறைந்த
அந்த சிரிப்பும் அவனை
ஆயிரம் பிள்ளைக்கு அப்பனாக்கியது…           

Tuesday 3 September 2019

வாடிய பணம்

கீறல் விழுந்த கண்ணாடியும்
தையல் போட்ட செருப்பும்
பச்சை துண்டுடன்...

எட்டு மணி பஸ்ச பிடிக்க
 கீரை கட்டுடன் வந்து நின்றான்
அந்த மாநிற மனிதன்...

நாளாய் மடித்த பத்து ரூபாய் நோட்டை
 இறுக்கி பிடித்தபடி  நிற்க
இடம் இல்லாத பஸ்சில் ..

வேண்டா வெறுப்பாய் அவனை
கடந்து சென்றது அந்த பயணம்
இடம் வருவதற்குள் பாதி பணம் வாடி போச்சு..

வேற வழியும் இல்ல
ஈர துணியில் பாதி கீரைக்கும்
மீதி அவன் வயித்துக்கும்ன்னு ஆயிருச்சு. . 

Friday 30 August 2019

கிறுக்குப்பய கிழவி

இது வாடிக்கையான நேரம் தான்
மாணிக்கத்தின் வருகையை பார்த்தபடி
கிழவி வெத்தலை மடித்தாள்...

என்ன கிழவி உன் பேரன்
வந்தா தான் சோறு போடுவியா
வேலைய பாருடி கிறுக்கு சிறுக்கி ..

என்ற  பாட்டனின் பேச்சு
கிழவியை கேலி செய்த
அரை நொடியில்
மாணிக்கம் வந்தான்....

என்ன கிழவி சாப்டயானு கேட்டவனை
"கிறுக்குப்பய" எனக்கென்ன
நீ சாப்பிடுனு வந்தால் வறுக்கி வரடீ உடன்...

Thursday 29 August 2019

நடைபாதை நகரம்( நரகம்)

கார்பன் கரி படிந்த முகமும்
கிழிந்த சட்டையும் அவனை அடையாள படுத்தியது
அவன் இந்த நகர வாழ்க்கையின்
நடைபாதை மனிதன் என்பதை..

காட்சி பொருளாக்கப்பட்ட உணவு கடைகளை
வெரித்து  பார்த்த படி அவனின்
அருந்த செருப்புகள் நகர மறுத்தன...

தினமும் பசியுடன் தோற்றும்
இன்றும் அவன் கேட்க தொடங்கி விட்டான்

ஐயா...
இந்த புத்தகம் பத்து ரூபாய் வாங்கிக்கொள்ளுங்கள் என்று.