Friday 27 September 2019

அரை குறை

வேல்கம்பும் தீப்பந்தமுமாய்
காடு மலை திரிந்தவன்
கடைசியில் நதிக்கரை வந்தடைந்தான்...

இடம் கண்டவன், தேவைக்காக
கல், மரம், மண், ஏர் தொழில்
செய்து வாழத்தொடங்கி...

ஓர் தொழில் செய்தவன் கூட்டமானான்
அவன் தொழில் அந்த கூட்டத்திற்கு
அடையாளமாகி போனது ...

அவன் தொழில் அறிவும், ஆற்றலும்
வணிகமும் சார்ந்து செல்லாமல்
அரை குறை அறிவாய் சாதியாய் நின்றது..

1 comment: