Thursday 12 September 2019

மாநகர அகதி

குக்கிராமத்தின் கடைசி பேருந்தில்
ஜன்னல் சீட்டை பிடித்தபடி  வருங்கால
கனவுகளுடன் சென்னை புறப்பட்டான்...

சினிமாவில் அவன்  பார்த்த சென்னை
நிஜத்தில் நெரிசலும், கோபமும்,
பயமும், பதட்டமுமாய் மட்டுமே இருந்தது..

ஐந்து ரூபா டீயும் , அளவு சாப்பாடும்
சங்கிலியால் பிணைக்கப்பட்ட
மாநகர டம்ளாரும் அவனை
பிழைக்க வந்தவன் என 
அகதியாக்கியது...

இறக்குமதி செய்யப்பட்ட காருக்கும்
கடைக்கும் செல்போனுக்கும்
இடையில்  அவன் மட்டும்

எண்ணெய் வைத்து சீவிய தலையுடன்
உள்நாட்டு உற்பத்தியாய்
தனித்து நின்றான்... 

4 comments:

  1. தலைக்கு எண்ணை மட்டும் தான் வைக்கல அப்புறம் எல்லாம் கரெக்ட் தான்.

    ReplyDelete
  2. unga chennai life nabagam varutha...

    ReplyDelete
  3. Palar valkaiuda unmai varigal..

    ReplyDelete
  4. Good start and nice content da...

    ReplyDelete